For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கோவிலில் குண்டுவெடிப்பு
விஜயவாடா:
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் கோவில் அருகே வெடிகுண்டு வெடித்தது.
புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது. பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் மூடிய பிறகு பக்தர்கள் அனைவரும் சென்று விட்ட பின்னர் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வெடிகுண்டு வெடித்ததில் கோவிலின் தரைப்பகுதி பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
மே 21-ம் தேதி மசிலிப்பட்டனத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடித்தது. இதில் 30 பேர் காயமடைந்தனர். இதற்குப் பழி வாங்கும் விதத்தில்விஜயவாடா சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே, மசிலிப்பட்டனம் சம்பவம் தொடர்பாக 10 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, May 25, 2000, 5:30 [IST]