தமிழகத்தில் இன்று
சென்னை:
சென்னை உள்பட இந்தியாவில் வேறு எங்கும் உச்சநீதிமன்ற கிளைகள் அமைக்க முடியாது என்று தலைமை நீதிபதிஅறிவித்துள்ளார். சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் 4 மண்டலங்களிலும் உச்சநீதிமன்றப் பிரிவுகளை ஏற்படுத்தி நீதிமன்றத்தை நாடிவருபவர்கள் செலவைக் குறைக்கலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்கு யோசனை தெரிவித்து இருந்தது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஆராய்ந்தனர். அப்பொழுது டெல்லிக்கு வெளியேஉச்சநீதிமன்ற கிளை (பெஞ்ச்) எதையும் ஏற்படுத்தக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசியல்சட்டத்தின் 130 வது பிரிவின்படி உச்சநீதிமன்றம் டெல்லி அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதலோடுஅப்போதைக்கப்போது முடிவு செய்யும் இடத்தில் அல்லது இடங்களில் தனது விசாரணையை நடத்த வேண்டும்என்று உள்ளது.
இதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற கிளையை டெல்லிக்கு வெளியில் அமைக்க முடியாது என்று மத்திய அரசுக்குதலைமை நீதிபதி ஆனந்த் கடிதம் எழுதியுள்ளார்.