தமிழகத்தில் இன்று
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பட்ஜெட்டில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு புதிய வரிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் 2000 -2001 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
மின்சாரம் வாங்குவதால் ஏற்பட்டுள்ள கணிசமான செலவு உயர்வை சரிகட்ட மின்கட்டண விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமானது. மின்கட்டணங்களின்விகிதங்கள் இறுதியாக கடந்த 1999 ம் ஆண்டு ஏப்ரல் முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
குடிநீர் கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொருட்கள் மீதான வரிகளும் மாற்றப்பட்டுள்ளது. பட்ஜெட்டை முதல்வர் படிக்கத்தொடங்க, எதிர்க்கட்சித்தலைவர் ஜானகிராமன் எழுந்து சமச்சீர் வரி பிரச்சனையில் அரசின் நிலை என்ன! என்பதை அறிந்தபிறகே பட்ஜெட் தாக்கல்செய்யப்படும் என எதிர்ப்புத் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏக்கான குரல் கொடுத்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications