For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
ஜெ. பெயரில் ரூ. 31 லட்சம் முதலீடு: வங்கி மேலாளர் சாட்சியம்

சென்னை:

செகந்திராபாத் நகரிலுள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ. 31.10 லட்சம் பணத்தை முதலீடு செய்ததாககிளை மேலாளர் பிரபாகர், ஜெயலலிதா வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார்.

ரூ. 66.65 கோடி அளவுக்கு வருமானம் சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் சாட்சி விசாரணை, முதலாவது சிறப்புநீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் முன்னிலையில் வியாழக்கிழமை நடந்தது.

அப்போது வங்கி மேலாளர் பிரபாகர் அளித்த சாட்சியம்:

1992-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி ரூ. 6.30 லட்சம், 1993-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி ரூ. 3 லட்சம், 1994-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதிரூ. 6.20 லட்சம், 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ. 12.60 லட்சம் பணம் ஜெயலலிதா பெயரில் வங்கியின் சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டது.

1991-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் ரூ. 9.18 லட்சம் இருந்தது. 1996-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி ரூ. 3.84லட்சமாக இருந்தது. ஜெயலலிதாவுக்கு மொத்தம் ரூ. 3.17 லட்சம் வட்டியாக வழங்கப்பட்டது.

இதுதவிர, மாதாந்திர வட்டி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஜெயலலிதா, ரூ. 3 லட்சம் முதலீடு செய்திருந்தார். ஒவ்வொரு மாதமும் அவரது கணக்கிலிருந்ததுரூ. 10,000 பிடித்தம் செய்து, ரவீந்தர் ரெட்டி என்பவரின கணக்கிற்கு அனுப்பப்பட்டது. இந்தக் கணக்கு ஆந்திர வங்கியில் இருந்தது என்றார் பிரபாகர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X