தமிழகத்தில் இன்று
-செ-ள-தி-யில் பெண்ணைக் கற்பழித்துக் கொன்றவர் தலை துண்டிப்பு
துபாய்:
---செள-தி அரே-பியா-வில் வேலை பார்த்-து வந்-த இந்தோனேசிய பெண்ணைக் கடத்திச் சென்று, கற்பழித்துக் கொன்றவருக்குத் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
டாக்சி டிரைவரான அந்த நபர், அந்-தப் பெண்ணை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அங்கு வைத்து அப்பெண்ணைக்கற்பழித்தார். டிரைவரிடமிருந்து தப்பிப்பதற்காக அப்பெண், ஜன்னல் வழியாக மாடியிலிருந்து கீழே குதித்தார். ஆனால் காயமடைந்து அங்கேயே இறந்துவிட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு வியாழக்கிழமை தைஃப் என்றநகரில் பொது இடத்தில் தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டில் இதுவரை 42 பேருக்கு செளதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications