தமிழகத்தில் இன்று
நடுக்கடலில் தத்தளித்த 19 இலங்கை அகதிகள் மீட்பு
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே ஐந்தாம் தீவு என்ற இடத்தில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 19 இலங்கைத் தமிழ் அகதிகளை வியாழக்கிழமை மாலைஇந்தியக் கடற்படை வீரர்கள் மீட்டனர்.
இவர்களில் நான்கு பேர் பெண்கள். மூன்று பேர் குழந்தைகள். இலங்கையிலிருந்து இவர்களை படகுகளில் அழைத்து வந்தவர்கள், அவர்களை தீவில்விட்டுவிட்டு சென்று விட்டனர். இதனால் நடுக்கடலில் இவர்கள் பரிதவித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இவர்களைப் பார்த்த இலங்கைக் கடற்படையினர் இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவருக்கு தலையில் காயம்ஏற்பட்டது.
அகதிகள் அஞ்சாம் தீவில் அவதிப்படுவது குறித்து தகவல் அறிந்த இந்தியக் கடற்படை அதிகாரிகள் இவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இவர்களைமீட்க படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன. வியாழக்கிழமை மாலை இவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, மண்டபம் அகதிகள் முகாமுக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.