தமிழகத்தில் இன்று
"ஓ-டிப்--போங்-க": ரஷ்யாவில் 1.2 லட்சம் கைதிகளுக்கும் -மொத்-த-மா-க வி-டு-த--லை
மாஸ்கோ:
ரஷ்யாவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 1.2 லட்சம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ரஷ்யநாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாசிக்களின் தலைவர் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனி இரண்டாம் உலகப் போரில் தோற்றதன் 55-வதுஆண்டு நினைவாக இந் நடவடிக்கையை ரஷியா மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு ரஷ்யநாடாளுமன்றத்தின் கீழ்ச் சபையான டூமா வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
தற்போது இந்த மசோதா, மேல் சபையான பெடரேஷன் கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் அந்தமசோதா இறுதி ஒப்புதலுக்கான அதிபர் விளாடிமிர் புடினுக்கு அனுப்பப்படும். அதிபர் ஒப்புதலுக்குப் பிறகு அந்தமசோதா சட்டமாக்கப்படும்.
ஆயுள் தண்டனையின் கடைசி வருடத்தை அனுபவித்து வரும் கைதிகளுக்கும், கடந்த மூன்று ஆண்டுகளாகசிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், இரண்டாம் உலகப் போரின் போது கைது செய்யப்பட்டுள்ளகைதிகள் அனைவருக்கும் இந்த மசோதா மூலம் விடுதலை கிடைக்கும்.
உலகம் முழுவதும் உள்ள சிறைகளில் சுமார் 18 லட்சம் ரஷ்யர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மிக மோசமானசூழ்நிலையில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இவர்களில் சுமார் 1 லட்சம் பேர் புற்றுநோயால்பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் உள்ள சிறைகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஅந் நாட்டு நீதித் துறை அமைச்சர் யூரி செய்க்கா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications