தமிழகத்தில் இன்று
டெல்லி:
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஏழு நாள் விஜயமாக ஞாயிற்றுக் கிழமையன்று சீனா செல்கிறார். இந்தியா -சீனாநல்லுறவை வளர்பதற்காக அவர் செல்கிறார்.
ஜனாதிபதி சீன தலைநகர் பீஜிங்கில் தங்கியிருக்கும் மூன்று நாட்களில் சீனத் தலைவர்களுடன் இருநாடுகளுக்கிடையேயான உறவுகள் உட்பட பல்வேறு விஷ-யங்-கள் -குறித்-து அவர் பேசுவார்.
சீன ஜனாதிபதி ஜியாங் ஜமின், சீனப் பிரதமர் ஜூ ராங்ஜியையும் சந்தித்துப் பேசுகிறார். தேசிய மக்கள் காங்கிரஸ்கட்சியின் தலைவர் லீ பெங்க் அளிக்கும் விருந்திலும் ஜனாதிபதி கலந்து கொள்கிறார்.
வெளியுறவுச் செயலாளர் லலித் மான் சிங் ஜனாதிபதியின் சீன விஜயம் இந்திய -சீன உறவில் மேலும் ஒரு மைல்கல்எனத் தெரிவித்தார். கடந்த முப்பது ஆண்டுகளில் இரு நாடுகளுக்கான உறவில் பல ஏற்ற்த்தாழ்வுகள்ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இ-ரு நா-டு-க-ளும் இணைந்-து அமைந்-துள்-ள கூட்டு செயற்குழு கடந்-த மாதம் சந்தித்து தொடர்ந்து வரும் எல்லைப்பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. எல்லைப் பிரச்சனை காரணாமாக 1962-ல் இருநாடுகளுக்குமிடையே கடும் போர் நடந்தது. இக் கூட்டுக் குழு 1988-ல் துவங்கப்பட்டது முதல் இதுவரை 12 முறைசந்தித்துப் பேசியுள்ளது.
வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் இருநாடுகளுக்குமிடையே தறபோது 2 பில்லியன் அளவுக்-கு வர்த்-த-கம் நடந்-துவருகிறது இது மேலும் அதிக்ரிக் வேண்டும் என்று கூறிய மான் சிங், சீனா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புகு குழுவில்இருப்-ப-தா-லும் அணு ஆயுத நாடு என்-ப-தா-லும் மிக முக்கியமான நாடாக -இந்-தி-யா கருதுகிறது என்-றார் மான்-சிங்.
ஜனாதிபதி இந்தியா திரும்பும் முன்பு கடற்கரை நகரமான குமிங்கும் செல்வார், ஜனாதிபதி ஜூன் மாதம் 3-ம் தேதிஇந்தியா திரும்புகிறார். அவருடன் அமைச்சர் மனோகர் ஜோஷி, -கம்-யூ-னிஸ்ட் கட்-சி எம்.பிக்-க-ளா-ன சேர்ந்தசோம்நாத் சட்டர்ஜி, ராமச்சந்திர பிள்ளை, மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் செல்கின்-ற-னர்.












Click it and Unblock the Notifications