தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்திய ரூபாய் மதிப்பு விரைவில் கூடும் - நிதி அமைச்சர் -நம்-பிக்-கை
டெல்லி:
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு விரைவில் நிலைபெறும்என்று மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக நிலையில்லாமல் ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ளது. இது தாற்காலிகமானதுதான். அமெரிக்கா தனது வட்டிவிகிதத்தை 50 சதவீதம் உயர்த்தியதுதான் இப்பிரச்சினைக்குக் காரணம்.
இந்திய ரூபாய் மதிப்பை நிலைப்படுத்த மத்திய நிதி அமைச்சகம் பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விரைவில் இந்திய ரூபாய் மதிப்புநிலைபெறும். அமெரிக்க டாலருக்கு எதிராகத் தான் இந்திய ரூபாய் மதிப்பு குறைவாகஉள்ளதே தவிர பவுண்ட் ஸ்டெர்லிங், ஈரோ போன்ற பிற கரன்சிகளுக்கு எதிராக 4சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய ரூபாயின் மாற்று மதிப்பை நிலைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியும் பலமுயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றார் சின்ஹா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications