Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
சீ-னா, -மி-யான்-மார் உடன் வர்த்தகம் செய்-ய வடகிழக்கு மாநிலங்கள் ஆர்வம்

குவஹாத்தி:

தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் எல்லை கடந்து வர்த்தகம் மேற்கொள்ள தக்க உதவிகளைச் செய்யவேண்டும்என்று இந்தியாவின் வடகிழக்கில் உள்ள 7 மாநில அரசுகளும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளன.

இது தொடர்பாக, அருணாசலப் பிரதேச முதல்வர் முகுத் மித்தி, ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு அளித்தபேட்டி:

தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிகவாய்ப்பு உள்ளது. அதற்காக, இந்திய சுதந்திரத்துக்கு முன் ஏற்படுத்தப்பட்ட மியான்மர் வழியாக சீனாவைஇணைக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்டில்வெல் சாலையைத் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்துக்கு இச் சாலை திறக்கப்பட்டால், சீனா மட்டுமல்ல தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் வடகிழக்குமாநிலங்கள் வர்த்தக இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஸ்டில்வெல் சாலையை மீண்டும்போக்குவரத்துக்கு திறந்துவிடும்படி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இது தொடர்பாக,வடகிழக்கு மாநிங்களைச் சேர்ந்த முதல்வர்கள் அடுத்த மாதம் பிரதமர் வாஜ்பாயியைச் சந்தித்து பேச உள்ளோம்.

தீவிரவாதக் குழுக்களின் வன்முறைச் செயல்கள் அதிகம் நடைபெறுவதால் வடகிழக்கு மாநிலங்கள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் பொருளாதார நிலையில் அவை மிகவும் பின்தங்கியுள்ளன. சர்வதே எல்லைப்பகுதி வழியே வர்த்தகம் மேற்கொள்ள இந்த 7 மாநிலங்களுக்கும் அனுமதி அளித்தால் அதன் மூலம் பொருளாதாரமேம்பாட்டை அவை அடைய வாய்ப்புள்ளது.

1079 கிலோமீட்டர் நீளமுள்ள ஸ்டில்வெல் சாலை, அஸ்ஸாமில் துவங்கி, மியான்மரில் உள்ள பாங்சா கணவாய்வழியாக தென் சீனாவில் குன்மிங் என்ற இடத்தில் முடிவடைகிறது. சீனாவுக்கு மட்டுமல்ல தென் கிழக்கு ஆசியநாடுகளின் தலைநகர்களுக்கான இணைப்பை இச் சாலை ஏற்படுத்தித் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், பழங்கள், உணவுப் பொருட்கள்,காய்கறிகள், துணி, பருந்தி நூல் போன்றவற்றுக்கு அதிக டிமாண்ட் உள்ளது. அதே நேரத்தில், செயற்கை இழையால்நெய்யப்பட துணிகள், மின்னணுச் சாதனங்கள், தேக்கு, தங்கம் மற்றும் ரத்தினக் கற்களுக்கு இந்திய மார்க்கெட்டில்அதிக டிமாண்ட் உள்ளது.

ஸ்டில்வெல் சாலையைத் திறந்தால், மேற்கண்ட இரு தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும். வடகிழக்குமாநிலங்களின் நுழைவாயிலாக அஸ்ஸாம் உள்ளது. அஸ்ஸாமிலிருந்து டெல்லி 2000 கிலோமீட்டர் தூரத்திலலும்,மும்பை 3000 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. ஆனால் யங்கூன், பாங்காக் மற்றும் பல சீன நகரங்களுக்கும்அஸ்ஸாமுக்கும் இடையே உள்ள தூரம் மிகவும் குறைவு. ஸ்டில்வெல் சாலை போக்ககுவரத்துக்குத்திறக்கப்பட்டால், மிகவும் எளிதாக வர்த்தகம் மேற்கொள்ளமுடியும் என்றார் மித்தி.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+