தமிழகத்தில் இன்று
லண்டன்:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையில் கடும் இறுதித் தாக்குதல்மூளவிருக்கும் சூழ்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து 2000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் அங்கிருந்து பாதுகாப்பானஇடத்திற்குச் சென்றுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
2000 பேருக்கும் மேல் யாழ்ப்பாணத்தின் முக்கியப் போர்க்களப் பகுதியிலிருந்து வெளியேறி விட்டாலும் கூடஇன்னும் பலர் இரு தரப்பினருக்கும் இடையே சிக்கியுள்ளதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
லண்டனில் இதுதொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அகதிகளுக்கான அமைப்பின் ஆணையர்வெளியிட்ட அறிக்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை ராணுவத்தினர் வெளியேறுவதற்கு வசதியாக 12 மணிநேர காலக் கெடு சனிக்கிழமை இரவு 10 மணியுடன் முடிந்து விட்டது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும்,இலங்கை ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலைத் தொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் யாழ்ப்பாணத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மிகவும்விழிப்புணர்வோடு இருந்து வருகின்றனர். தென் மராச்சி பகுதியிலிருந்துதான் அதிக அளவில் தமிழர்கள்வெளியேறி வருகின்றனர். யாழ்ப்பாணத்திற்கு சில மைல்கள் தூரத்தில் இது உள்ளது. அரசின் கட்டுப்பாட்டில்உள்ள பகுதிகளுக்கு இவர்கள் சென்றுள்ளனர்.
தென் மராச்சி பகுதியில் போர் நடப்பதைத் தவிர்க்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.ஆனால்இதுவரை அரசுத் தரப்பிலிருந்து பதில் இல்லை என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே, ராணுவ செய்தித் தொடர்பாளர் பலிதா பெர்னாண்டோ கூறுகையில், சாவகச்சேரி பகுதியில்தங்களிடமுள்ள நவீனரக போர்ப் படையை யாழ்ப்பாணத்தில் பயன்படுத்த அவகாசம் தேவைப்படுவதால், போர்நிறுத்தம் செய்வதாக புலிகள் அறிவித்துள்ளதாக கூறினார். இதை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications