தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
பிஜி நாடாளுமன்றம் நோக்கி ஆயுதங்களுடன் சென்ற கும்பல்

சுவா:

பிஜி நாடாளுமன்றத்தை நோக்கி ஆயுதம் ஏந்திய கும்பல் முன்னேறிச் சென்றதாகவும், அவர்களைத் தடுத்து நிறுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடுநடத்தியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புரட்சியின் மூலம் கடந்த வாரம் பிஜி அரசைக் கைப்பற்றிய ஜார்ஜ் ஸ்பீட், நாடாளுமன்றத்துக்குள் பிரதமர் மகேந்திர சவுத்ரி மற்றும் அமைச்சர்களைசிறை வைத்துள்ளார். தற்போது நாடாளுமன்றதைச் சுற்றி பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

இந் நிலையில், போலீஸாருக்கும் ஸ்பீட் ஆதரவாளர்களுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த மோதலில் 2 போலீஸ்காரர்களும், ஒரு தொலைக்காட்சிநிறுவன கேமராமேனும் காயமடைந்தனர்.

இதற்கிடையே, பிஜி நாடாளுமன்றத்தை நோக்கி ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஸ்பீட் ஆதரவாளர்களா அல்லதுஎதிர்ப்பாளர்களா என்று தெரியவில்லை. அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அது குறித்த உறுதியானதகவல் ஏதும் இல்லை. மேலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக என்றும் தெரியவில்லை.

நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள முக்கியச் சாலையில் யார் வந்தாலும் அவர்களைத் துப்பாக்கியால் சுடும்படி போலீஸாருக்குஉத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அச் சாலையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருப்பவர்களுக்கு வெளியே வரவேண்டாம் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+