தமிழகத்தில் இன்று
துபாய்:
குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம்திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 25 ம் தேதி கையெழுத்தானது. எமிரேட் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சாயிப் சயித், இந்தியாவின்சார்பில் கே.சி.சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம், இந்தியா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்டில் குற்றம் செய்து விட்டு, அடுத்த நாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை நாடுகடத்தி சம்பந்தப்பட்ட நாட்டுக்குக் கொண்டு வர வகை செய்கிறது. பயங்கரவாதத்தைக் குறைப்பது, பொருளாதார குற்றங்களைத் தடுப்பது ஆகியநோக்கத்தில் இந்த ஒப்பந்தம் உருவானது.
குற்றவாளிகள் தவறு செய்து விட்டு அடுத்த நாட்டுக்குத் தப்பி விடுவதால், இந்தியாவில் பல வழக்குகள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளன.தற்போதைய ஒப்பந்தம் மூலம் குற்றவாளிகளைப் பெற்று, வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு குற்றம் செய்து விட்டு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளும் நாடு கடத்தப்படுவர்.
இதுவரை, இந்தியா 20 நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விரைவில் ஓமனுடன் இதுபோன்ற ஒப்பந்தம்கையெழுத்திடப்படும்.
யு.என்.ஐ.