தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு: 16 பேர் பலி

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 12 பேர் தீவிரவாதிகள்,ஒருவர் பெண்.

ஸ்ரீநகரில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் வாசல்பகுதியில் உள்ள டாக்ஸி ஸ்டான்ட் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 2பேர் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள். 9 பேர் படுகாயமடைந்தார்கள்.

குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானாவர்கள் டாக்ஸி டிரைவர்கள். சம்பவ இடத்திற்கு உடனடியாக எஸ்எம்எச்எஸ்மருத்துவமனையிலிருந்து டாக்டர்கள் சென்று முதலுதவி செய்தார்கள்.

காயமடைந்தவர்களின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் இதுவரைதெரியவில்லை.

மேலும் ஸ்ரீநகரில் ராணுவத்தினர் நள்ளிரவு முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டதில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர்வெளிநாட்டுத் தீவிரவாதிகள்.

ஸ்ரீநகரில் ஜால்கோட்- மஞ்சாகோட் பகுதியில் தீவிரவாதிகள் தஸ்லீமா என்ற பெண்ணைக் கடத்திக் கொலை செய்தார்கள். இதையடுத்து அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ராணுவத்தினர் அப்பகுதிக்குச் சென்று தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.

இதேபோல் ஃபரோட்டி-குஜ்ரான் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தார்கள்.

கோலே-படான் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 வெளிநாட்டுத் தீவிரவாதிகள்தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் விட்டுச்சென்ற ஏகே 47 ரக துப்பாக்கி, டெட்டனேட்டர்கள், சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

காஷ்மீரின் வடக்குப் பகுதியான பாஹ்ராம்போரா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.அப்பகுதியிலிருந்து ராணுவத்தினர் 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 26 புத்தகங்கள், கிரானைட் வெடிப்பொருட்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

அபுபிலால், அபு ஜாபர், அபு முஸாமில், மற்றும் குலாம் ஹாசன் ஆகிய தீவிரவாதிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பண்டிப்போரா பகுதியில் குர்ஷித் அகமத் ஹாஜி என்பவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

காஷ்மீரில் நாகர்கோட் பகுதியில் ஏற்பட்ட கண்ணிவெடியில் சிக்கிய ரஹ்மத் என்ற பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+