தமிழகத்தில் இன்று
அதிமுகவிலிருந்து விரட்டப்படுபவர்களை திமுக பிடிக்கிறது: காளிமுத்து
சென்னை:
அதிமுகவிலிருந்து நாங்கள் விரட்டி விடுபவர்களை, திமுக பிடிக்கிறது என்று அதிமுகஅவைத் தலைவர் காளிமுத்து கூறியுள்ளார்.
சென்னையில், ஜெயலலிதா பேரவை சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில்கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
அதிமுகவிலிருந்து சில நம்பிக்கைத் துரோகிகளை பொதுச் செயலாளர் ஜெயலலிதாநீக்கினார். இவர்களால் அதிமுகவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லலை.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன், ரகுபதி போன்றோர் இனிமேல்சின்னாபின்னமாக போவார்கள்.
நாங்கள் விரட்டி விட்ட இதுபோன்ற துரோகிகளை திமுக விரட்டிப் பிடிக்கிறது. இந்தத்துரோகிகளால் அதிமுகவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
திமுக அரசு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது பொய் வழக்குகளைபோட்டு வருகிறது. இதன் மூலம் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் அழிக்கமுயற்சி நடக்கிறது.இது நடக்காது. எம்.ஜி.ஆர். இருந்தபோது, எதிர்க்கட்சிகளைஅழிக்கவோ, அடக்கவோ நினைத்ததில்லை. ஜெயலலிதா காலத்திலும் யாரையும் பழிவாங்க அவர் நினைத்ததில்லை.
தனி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்திலும் தான் குற்றமற்றவர்என்பதை ஜெயலலிதா நிரூபிப்பார் என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications