தமிழகத்தில் இன்று
சுவா:
இந்தியர்கள் உள்பட பல இனத்தவரும் பிரதமர் பதவிக்கு வர வகை செய்யும் அரசியல் சட்டத்தை பிஜியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம் ரத்துசெய்து விட்டது.
ராணுவத் தளபதி கமாண்டர் பிராங்க் பைனிமராமா இதுதொடர்பாக வெளியிட்ட உத்தரவில், 1997-ம ஆண்டு கொண்டு வரப்பட்ட பிஜி அரசியல் சட்டம்முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. மே 29-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது என்று கூறியுள்ளார்.
பிஜி தகவல் தொடர்புத் துறை அதிகாரிகள் இந்த உத்தரவின் நகலை செய்தியாளர்களுக்கு கொடுத்தனர்.
அரசியல் சட்டம் நீக்கப்பட்டு விட்டதன் மூலம் இந்தியர்கள் பிஜித் தீவின் பிரதமர் பதவிக்கு வரும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்பதுதான், ராணுவத்திற்கு முன்பு புரட்சி செய்து பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட எம்.பிக்களை சிறை பிடித்த ஜார்ஜ் ஸ்பீட் விதித்த முதல்நிபந்தனையாகும்.
மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார். இந்தியரான பிரதமர் மகேந்திர செளத்ரி நாடாளுமன்றத்தில் சிறை வைக்கப்பட்டார்.அதன் பிறகு திங்கள்கிழமை ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அதிபர் மாரா, பதவியை ராஜினாமா செய்து விட்டு தலைமறைவானார். தற்போதுஇந்தியர்களுக்கு ஆதரவான அரசியல் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications