தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

எம்.பி. பதவியை இழக்கிறார் செல்வகணபதி

சென்னை:

கலர் டிவி ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சரானடி.என். செல்வகணபதி, தனது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைஇழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.

சேலம் தொகுதியிலிருந்து அதிமுக உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டவர் செல்வகணபதி. இவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாள்ஜெயலலிதா உள்ளிட்ட 10 பேர் மீது ரூ.10 கோடி கலர் டிவி ஊழல் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமைதீர்ப்பளிக்கப்பட்டது. இதில், ஜெயலலிதா உள்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.ஆனால், செல்வகணபதி உள்பட மற்றவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தம் 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

செல்வகணபதிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்துஅவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கவேண்டிய நிலைக்குஆளாகியுள்ளார். மேலும், இனி தேர்தலில் நிற்கும் வாய்ப்பையும் அவர் இழக்கிறார்.

ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் 8 (3) பிரிவின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்வகணபதிஇழக்கிறார். ஏற்கெனவே, பிளசன்ட் ஸ்டே வழக்கிலும் அவருக்கு ஓராண்டுகடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+