கூடைப்பந்து: இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குக் கோப்பை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில்இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் அணி கோப்பையை வென்றது.
கோவையில் நாச்சிமுத்துக் கவுண்டர் கோப்பைக்கான 42 வதுகூடைப்பந்து போட்டியை கோவை மாவட்ட கூடைப்பந்துவிளையாட்டுக் கழகம் நடத்தியது.
இதில் நேற்று நிடந்த இறுதிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்தஇந்தியன் ஓவர்சீஸ் அணியும், செகந்திராபாத் மத்திய ரயில்வேஅணியும் மோதின.
முதல் பாதியாட்டத்தில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் அணி40-34 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆட்டஇறுதியில் 88:60 என்ற புள்ளிக் கணக்கில் வென்று நாச்சிமுத்துக்கவுண்டர் கோப்பையை பெற்றது.












Click it and Unblock the Notifications