தமிழகத்தில் இன்று
கோவை:
கோவை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ கார் எரிப்பு வழக்கில்இந்துமக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட 9 பேருக்கு இன்றுகுற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
கோவையில் கடந்த 1997ம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது கோவை அரசுஆஸ்பத்திரியில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க கோவைமேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. தண்டபாணி வந்தார்.
அப்போது அங்கு நிலவிய கலவரத்தில் அவரது கார் தீ வைத்துஎரிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர்அர்ஜூன் சம்பத் உட்பட 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இவர்கள் அனைவரும் தற்போது கோவை மத்திய சிறையில் இருந்துவருகின்றனர். இந்த வழக்கு கோவை 3வது நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனைவரும் நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்பட்டனர்.
வழக்குத் தொடர்பாக 10 பேருக்கும் நேற்று குற்றப்பத்திரிக்கை நகலைமாஜிஸ்திரேட் சர்வமங்களா வழங்கினார். இதனையொட்டி கோவைநீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications