தமிழகத்தில் இன்று
ஏப்ரலில் இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி அதிகரிப்பு
டெல்லி:
நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவு அதிகரித்துள்ளது.ஏற்றுமதியைப் பொறுத்தவரை ரூ.14,932.92 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்தஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இது32.82 சதவீதம் அதிகமாகும்.
அதே போல், ஏப்ரல் மாதம் ரூ.19,945 கோடி மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இது கடந்தஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 43.64 சதவீதம் அதிகமாகும்.
பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதியைப் பொறுத்தவரை, கடந்த ஏப்ரல் மாதம் ரூ.5698 கோடியாகும். இதுகடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 123.12 சதவீதம் அதிகம். பெட்ரோலியப் பொருட்கள் அல்லாத மற்றபொருட்களின் இறக்குமதி ரூ.14,247 கோடியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 25.72 சதவீதம்அதிகமாகும். ஏப்ரல் மாதத்தின் வர்த்தகப் பற்றாக்குறை ரூ.4884 கோடியாகும்.
யு.என்.ஐ.