துபாய் ஒரு நாள் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்:
துபாயில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே செப்டம்பரில் சில ஒரு நாள் போட்டிகளை நடத்த துபாய் கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்தது. அது தொடர்பாக,பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியங்களுக்கு கடிதம் எழுதப்பட்டது.
போட்டியில் கலந்து கொள்ள பாகிஸ்தான் ஏற்கெனவே சம்மதம் தெரிவித்துவிட்டது. ஆனால், அப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று இந்தியாதெரிவித்துவிட்டது.
துபாய் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து அழைப்பு வந்துள்ளது. ஆனால், அதை ஏற்க முடியாத நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளதுஎன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் லேலே தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications