பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து: நியூசிலாந்து ஆதரவு
டாக்கா:
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்து கொடுக்க நியுசிலாந்து ஆதரவு தெரிவித்துள்ளது. இத் தகவலை, பங்களாதேஷ்கிரிக்கெட் வாரியத் தலைவர் சாபெர் உசேன் சவுத்ரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
பங்களாதேஷுக்கு டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து கிடைக்க ஆதரவு அளிப்பதாக நியுசிலாந்து தெரிவித்துள்ளது. லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ளசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் தனது ஆதரவைத் தெரிவிப்பதாக அந் நாட்டின் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமிருந்து கடிதம் வந்துள்ளது. இதற்காக, நியுசிலாந்து நாட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்என்றார் சவுத்ரி.
கடந்த மாதம் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜான் ஆண்டர்சனை சவுத்ரி சந்தித்துப் பேசினார். அப்போது, தங்கள் நாட்டுக்கு டெஸ்ட் விளையாடும்அந்தஸ்து கிடைக்க ஆதரவு தெரிவிக்கும்படி சவுத்ரி கேட்டுக் கொண்டார். இதையடுத்து தற்போது தனது ஆதரவை நியுசிலாந்து தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 9நாடுகள் மட்டுமே டெஸ்ட் விளையாடும் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஜிம்பாப்வே அணிக்கு அந்த அந்தஸ்து கிடைத்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications