For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஓடையில் பஸ் விழுந்து 17 பேர் சாவு

டேராடூன்:

உத்தரப்பிரதேச மாநிலம், தெஹ்ரி மாவட்டத்தில் சம்பா என்ற இடம் அருகே சாலையோரம் இருந்த ஓடையில் பஸ் விழுந்து 17 பேர் இறந்தனர். 27 பேர்காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை இவ் விபத்து நடந்தது.

கங்கோத்ரியிலிருந்து ரிஷிகேஷுக்கு இந்த சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸின் ரேடியேட்டர் திடீரென்று வெடித்ததால், அதிலிருந்த சுடுநீர் டிரைவரின்முகத்தில் தெறித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த ஓடையில் கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே 15 பேர் இறந்தனர். மற்ற இருவர் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். இறந்தவர்களில் 9 பேர்பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவர். படுகாயமடைந்த டிரைவர் உள்பட 27 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 பேர் தனியார் பஸ்ஸில் கோயில் சுற்றுலாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில்சிக்கிக்கொண்டனர். சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X