தமிழகத்தில் இன்று
மத்திய அரசின் வரி விதிப்பால் கார்பெட் தொழிலில் ரூ.200 கோடி இழப்பு
டெல்லி:
தரைவிரிப்புத் தயாரிப்பு (கார்பெட்) தொழிலில் புதிய வரி விதிப்புகளை மத்திய அரசுஅறிவித்துள்ளதால், ரூ.200 கோடி இழப்பு ஏற்படுவதுடன், 2 லட்சம் பேர் வேலைஇழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஏற்றுமதிச் சங்கக் கூட்டமைப்புதெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கூட்டமைப்பின் வட மண்டலத் தலைவர் கார்ஜ் கூறியதாவது:
செயற்கை இழைகள், உல்லன் மற்றும் பட்டு இழைகளால் தயாரிக்கப்படும்தரைவிரிப்புக்கள் மீது புதிய வரி விதிப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகார்பெட் தொழிலுக்கு பெருத்த அடியாகும்.
இதன் மூலம், இத் தொழில் நலிவுறும். மேலும், ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு ஏற்றுமதிஇழப்பு ஏற்படுவதுடன், 2 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயமும் உள்ளது.
9 புதிய தரைவிரிப்புகளின் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசு, மற்ற 141 விதமானதரை விரிப்புகளின் மீது வரியை அதிகரித்துள்ளது எந்த பலனையும் தராது. இதனால்,சிறு தொழில் பிரிவைச் சேர்ந்த இந்த கார்பெட் தயாரிப்புத் தொழிலின் ஏற்றுமதிமிகவும் குறையும் என்றார் கார்க்.
யு.என்.ஐ.