For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மத்திய அரசின் வரி விதிப்பால் கார்பெட் தொழிலில் ரூ.200 கோடி இழப்பு

டெல்லி:

தரைவிரிப்புத் தயாரிப்பு (கார்பெட்) தொழிலில் புதிய வரி விதிப்புகளை மத்திய அரசுஅறிவித்துள்ளதால், ரூ.200 கோடி இழப்பு ஏற்படுவதுடன், 2 லட்சம் பேர் வேலைஇழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஏற்றுமதிச் சங்கக் கூட்டமைப்புதெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கூட்டமைப்பின் வட மண்டலத் தலைவர் கார்ஜ் கூறியதாவது:

செயற்கை இழைகள், உல்லன் மற்றும் பட்டு இழைகளால் தயாரிக்கப்படும்தரைவிரிப்புக்கள் மீது புதிய வரி விதிப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகார்பெட் தொழிலுக்கு பெருத்த அடியாகும்.

இதன் மூலம், இத் தொழில் நலிவுறும். மேலும், ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு ஏற்றுமதிஇழப்பு ஏற்படுவதுடன், 2 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயமும் உள்ளது.

9 புதிய தரைவிரிப்புகளின் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசு, மற்ற 141 விதமானதரை விரிப்புகளின் மீது வரியை அதிகரித்துள்ளது எந்த பலனையும் தராது. இதனால்,சிறு தொழில் பிரிவைச் சேர்ந்த இந்த கார்பெட் தயாரிப்புத் தொழிலின் ஏற்றுமதிமிகவும் குறையும் என்றார் கார்க்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X