For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சி.பி.ஐ.யிடம் கிரிக்கெட் சூதாட்ட வீடியோ கேசட்டை ஒப்படைத்தா பிரபாகர்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தன்னிடம் இருந்த ஒரே ஆதாரமான வீடியோ கேசட்டை, கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் மத்தியபுலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகளிடம் மனோஜ் பிரபாகர் ஒப்படைத்துள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கபில் தேவ், அசாருதீன், ஜடேஜா, மோங்கியா உள்ளிட்டவர்கள் மீது முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ்பிரபாகர் குற்றம் சாட்டினர். மேலும், தனக்கு ரூ.25 லட்சம் கொடுக்க கபில் தேவ் முன் வந்தாகவும் அவர் கூறினார்.

ஏற்கெனவே, தான் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, சிபிஐ அலுவலகத்துக்கு நேரில் சென்று கொடுத்துள்ளார் பிரபாகர்,இதற்கிடையே தான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்றும், பிரபாகர் கூறுவது பொய் என்றும் கபில்தேவ் அறிவித்தார்.

அப்படி கபில் தேவ் அறிவித்த சில நாட்களில் மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரபாகர், தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம்உள்ளதாகவும், இது தொடர்பாக முன்னாள் மற்றும் இந் நாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்,பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் ரகசியமாக எடுக்கப்பட்ட பேட்டிகள் அடங்கிய வீடியோ கேசட்டை வெளியிட்டார்.

அதில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, சித்து, மஞ்ச்ரேகர் உள்ளிட்டோர் பேட்டி அளித்துள்ளனர். இந்த கேசட் வெளியானவுடன் கிரிக்கெட் உலகில் பலர் திகைப்புக்குஉள்ளாகினர். உண்மையிலேயே இந்திய கிரிக்கெட் வீரர்கள் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்தன.

இந் நிலையில், விசாரணைக்கு உதவுவதற்காக கிரிக்கெட் சூதாட்டம் பற்றி விசாரித்து வரும் சிபிஐயிடம் தன்னிடமிருந்த வீடியோ கேசட்டை பிரபாகர்சனிக்கிழமை ஒப்படைத்தார். சிபிஐ விசாரணைக் குழு தலைமை அதிகாரி ஆர்.என். சவானியிடம் நேரடியாக தன்னிடமிருந்த 9 கேசட்டுகளை அவர் ஒப்படைத்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X