தமிழகத்தில் இன்று
சேலம் அரசு அலுவலகத்தில் ஊழியை தற்கொலை
சேலம்:
சேலம் அரசு கருவூலத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டக் கருவூலத்தில் போலி பில்கள் கொடுத்து சுமார் ஒரு கோரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் தற்கொலைசெய்து கொண்டுள்ளர்.
சேலம் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கருவூலம் இயங்கி வருகிறது. அரசு சம்பந்தப்பட்ட நிதி , சம்பளம் உட்பட அனைத்துபட்டுவாடாக்களும் இந்த அலுவலகத்தில் தான் அனுமதி பெற்று வழங்கப்படும்.
சேலத்தில் வணிகவரி அலுவலகத்தில் தான் அனுமதி பெற்று வழங்கப்படும். சேலம் வணிகவரி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர்பாஸ்கரன். இவர் கடந்த ஜனவரி 1 -ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரையில் சுமார் 13 போலி பில்களை தயாரித்து அதை கருவூலத்தில் கொடுத்துசுமார் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வணிகவரி உதவி ஆணையர் சுகுமாரன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் முகமது நசிமுதீன் உத்தரவின்பேரில் விசாரணை நடந்து வருகிறது. சேலம் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் சேலம், தர்மபுரி மாவட்ட சிறப்பு விசாரணை பிரிவினர்மாவட்டக் கருவூலத்தில் சோதனை நடத்தினர். கருவூலத்தில் பாஸ்கரன் போலி பில்கள் கொடுத்து பணம் வாங்கியது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக, கருவூலத்தில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் கருவூலத்தில் கணக்கு அதிகாரியாக பணிபுரிந்துவந்த சம்பா என்பவர், வெள்ளிக்கிழமை காலை அலுவலத்திற்கு வந்த சம்பா, திடீரென்று வீட்டிற்கு கிளம்பிச் சென்று விட்டார்.
அங்கே உடலில் மண்ணெண்னைய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். கருவூலத்தில் நடந்த ஊழல், ஊழியர் தற்கொலை குறித்தும்அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications