தமிழகத்தில் இன்று
பிஜியில் பிரதமரை விடுவிப்பதில் புதிய சிக்கல்
சுவா:
பிஜியில் புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட்டுக்கும், ராணுவத் தலைமைக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகதெரிகிறது. இதனால் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட பினைக் கைதிகள் விடுவிப்பது தொடர்பாக முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் ஸ்பீட் பேசுகையில், கூடிய சீக்கிரம் இப்பிரச்சினைக்கு முடிவு ஏற்படும் எனநினைத்திருந்தோம்.ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியை நோக்கி சென்று கொண்டுள்ளது. எனவே எங்கள் வசம் உள்ளவர்களை விடுவிப்பதுதாமதமாகலாம் என்றார்.
பிஜியில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள ராணுவமும், புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடும், வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய பிறகு,தற்போதைய பிரச்சினைக்கு முடிவு காண்பதை, பிஜி பழங்குடித் தலைவர்களிடம் விட்டு விட தீர்மானித்தனர். இதையடுத்து திங்கள்கிழமைக்குள் தங்கள் வசம்உள்ளவர்களை விடுவிப்பதாக ஸ்பீட் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரச்சினை குறித்து பழங்குடி தலைவர்களிடம் விவாதிப்பது தொடர்பாக ராணுவத் தலைமை பிடிவாதமாக இருப்பதாக இப்போது ஸ்பீட்கூறியுள்ளார்.
ராணுவம் குவிப்பு:
ராணுவத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. சுவாபகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சிலர் சூறையாடலில் ஈடுபட்டனர்.