தமிழகத்தில் இன்று
பாய்லர் தயாரிக்க ஜெர்மனி நிறுவனத்துடன் பெல் நிறுவனம் ஒப்பந்தம்
டெல்லி:
சுற்றுச்சூழலைப் பாதிக்காத பாய்லர் தயாரிப்பதற்காக, ஜெர்மனி நாட்டின் பெரிய பாய்லர் தயாரிப்பு நிறுவனத்துடன்இந்தியாவின் மிகப் பெரிய மிகுமின் நிறுவனம் (பெல்) தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
"ஒன்-த்ரூ பாய்லர்ஸ் என்ற பெயருடைய இந்த பாய்லரை பெல் நிறுவனமும், ஜெர்மனியின் பாப்காக் போர்சிக்பவர் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும். சுற்றுச்சூழலைப் பாதிக்காத இந்த பாய்லர், திருச்சியில் உள்ள பெல்நிறுவனத்தில் தயாரிக்கப்படும்.
நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இந்த பாய்லர் பயன்படுத்தப்படும். மேலும்,இந்த பாய்லரைப் பயன்படுத்தினால், மின் உற்பத்தி செய்ய குறைந்த அளவு நிலக்கரியைப் பயன்படுத்தினால்போதும்.
இந்தியாவில் பல பெரிய மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவற்றில் இத்தகைய ஒன்-த்ரூபாய்லர்ஸ்" பயன்படுத்தப்படவுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications