பேனா விளம்பரத்திலிருந்து டெண்டுல்கர், காம்ப்ளி, அகார்கர் நீக்கம்
மும்பை:
புகழ்பெற்ற டுடே பேனாக்களைத் தயாரித்து வரும் டுடே நிறுவனத்தின் விளம்பரத்திலிருந்து இந்தியகிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, அஜித் அகார்கர் ஆகியோர்நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் துரோலியா கூறியதாவது:
சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது கிரிக்கெட் சூதாட்டப் புகார்கள் கூறப்பட்டுள்ளன.இது தொடர்பாக, சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந் நிலையில், எங்கள் நிறுவன விளம்பரங்களில் இருந்து கிரிக்கெட் வீரர்களை நீக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மும்பை ரஞ்சிக் கோப்பை அணிக்கு ஸ்பான்சர் செய்ய கடந்த ஆண்டுஒப்பந்தம் போடப்பட்டது.
மேலும், அந்த அணியைச் சேர்ந்த 5 வீரர்கள் நடிக்கும் விளம்பரப் படமும் எடுக்கப்பட்டது. ஆனால்,சச்சின் நடித்த பகுதி மட்டுமே வெளியிடப்பட்டது. இந் நிலையில், சச்சின் டெண்டுல்கர் பிரச்சினையைஏற்படுத்தினார். சமீபத்தில் நடைபெற்ற தமிழகத்துக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை அரையிறுதிஆட்டத்தில் டுடே பேனா நிறுவனத்தின் சின்னம் பொறித்த சட்டையை அணி டெண்டுல்கர்மறுத்துவிட்டார்.
இதையடுத்து, 5 வீரர்களும் நடித்த விளம்பரப் படத்தை முழுவதுமாக வெளியிடுகிறோம் என்று உறுதிஅளித்ததன் பேரில், எங்கள் நிறுவனத்தின் சின்னம் பொறித்த சட்டையை அணிய டெண்டுல்கர் ஒப்புக்கொண்டார்.
இந் நிலையில், கிரிக்கெட் வீரர்கள் மீது லஞ்ச ஊழல் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆகவே,எங்கள் நிறுவனத்தின் பேனா விளம்பரத்தில் இருந்து டெண்டுல்கர், காம்ப்ளி, அகார்கர் ஆகியோரைநீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக ஹிந்தித் திரைப்பட உலகில் புதிய வரவான ரித்திக்ரோஷனைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கிரிக்கெட் விளையாட்டு மீது மக்களின் கருத்து திசைதிரும்பியுள்ளது. எங்கள் விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர்கள் இருந்தால், எங்களது பொருட்களின்விற்பனை குறையும் என்று கருதுகிறோம். ஆகவே, விளம்பரங்களில் இருந்து கிரிக்கெட் வீரர்களைநீக்க முடிவு செய்துள்ளோம் என்றார் துரோலியா.
யு.என்.ஐ.