For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

ஓடும் ரயிலில் திருடர்களை உதைத்து விரட்டிய விளையாட்டு வீராங்கனை

மும்பை:

மும்பையில் ஓடும் ரயிலில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட முயன்ற இருவரை, விளையாட்டு வீராங்கனை ஆர்த்தி பிரதான்,

கடுமையாக அடித்து, உதைத்து அவர்களது முயற்சியை முறியடித்தார்.

அர்ஜூனா விருது பெற்றவரான பிரபல நீண்ட தூர ஓட்டப் பந்தய வீராங்கனை ஆர்த்தி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்தேரியிலிருந்து, தாதருக்கு மின்சாரரயிலில் சென்று கொண்டிருந்தார். முதல் வகுப்புப் பெட்டியில் அவர் பயணித்தார். அவர் இருந்தது பெண்களுக்கான பெட்டி. அதில் அவரும், இன்னொரு பயணியும்மட்டுமே இருந்தனர்.

ரயில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 2 பேர் பெட்டியில் நுழைந்தனர். இருவரும் இளைஞர்கள். அவர்களில் ஒருவனுக்கு 10 வயதுதான்இருக்கும். இருவரும், ஆர்த்தி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் தருமாறு மிரட்டினர். சங்கிலி தங்கம் அல்ல என்று ஆர்த்தி கூறியபோது, திடீரென கத்தியைஎடுத்து மிரட்டினர். ரயில் அப்போது பந்த்ரா நிலையத்தை கடந்து கொண்டிருந்தது.

நிலைமையை உணர்ந்து சுதாரித்த ஆர்த்தி, உடனடியாக அவர்களில் ஒருவனை நோக்கி குத்தியுள்ளார். அப்போது, அவனுடன் இருந்த சிறுவன், ஆர்த்தியைரயிலிலிருந்து தள்ள முயன்றான். ஆனால் சமாளித்துக் கொண்ட ஆர்த்தி, அவனது சட்டைக் காலரைப் பிடித்து கடுமையாக அடித்து, உதைத்துள்ளார்.

அப்போது ரயில் தாதர் நிலையத்தை நெருங்கியது. தங்களது நிலைமை மோசமாவதை உணர்ந்த இரு திருடர்களும், ரயில் மெதுவாக சென்றதைப் பயன்படுத்திகீழே குதித்துத் தப்பினர். ரயிலிலிருந்து இரண்டு பேர் நிலை குலைந்த நிலையில் இறங்கி ஓடுவதைப் பார்த்த பொதுமக்கள், அவர்களைத் துரத்தினர். ஆனால்இருவரும் தப்பி விட்டனர்.

கடந்த ஆண்டும் இதோபோன்ற ஒரு சம்பவம் மும்பை ரயிலில் நடந்தது. ஜெயபாலா அஸார் என்பவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போதுகுடிபோதையில் இருந்த ஒருவர், ஜெயபாலாவை பிடித்துக் கீழே தள்ளினார். இதில் ஜெயபாலாவின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டன.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X