சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 150 பேருக்கு பரிசு
டெல்லி:
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர் மற்றும்வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
வீரர், வீராங்கனைகள் தவிர 18 பயிற்சியாளர்களுக்கும் இப் பரிசு வழங்கப்பட்டது. டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரொக்கப்பரிசுகளை மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தீன்ஷா வழங்கினார்.
சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 1986-ம் ஆண்டு முதல் இந்தரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பதக்கம் வாங்கியவர்களுக்கும், எதிர்கால விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும்உத்வேகமும், புத்துணர்ச்சியும் ஏற்படுவதற்காக இந்த சிறப்புப் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு மல்லேஸ்வரி, குஞ்சராணிதேவி, ஜோதிர்மயி சிக்தர், பி.டி. உஷா உள்ளிட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.15 லட்சம் வரைபல்வேறு பிரிவுகளில் 150 பேருக்கு இப் பரிசு வழங்கப்பட்டது. இதுவரை சுமார் 950 வீரர் மற்றும் வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications