முகத்தில் தெளித்த சாரல்...

Subscribe to Oneindia Tamil

இலங்கை கடற்படையின் இரு படகுகளை புலிகள் மூழ்கடித்தனர்

கொழும்பு:

இலங்கையின் வட பகுதியில் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் சண்டைஉச்சகட்டத்தை நெருங்கியுள்ளது. வடமராச்சி கடற்பகுதியில் இலங்கை கடற்படையின் இரு படகுகளை புலிகள்திங்கள்கிழமை தாக்கி மூழ்கடித்தனர்..

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் புலிகளுக்கு எதிராக போரிட்டு வரும் ராணுவத்தினருக்காக திரிகோணமலையிலிருந்துகாங்கேசன்துறைக்கு வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு இரு படகுகள் சென்று கொண்டிருந்தன. வடமராச்சிகடற்பகுதியில் வந்து கொண்டிருந்த அப் படகுகள் மீது புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

ஒரு படகை புலிகள் வெடி வைத்துத் தகர்த்தனர். இதையடுத்து பின்னால் தொடர்ந்து வந்த படகு,விபத்துக்குள்ளான படகில் இருப்பவர்களைக் காப்பாற்ற வேகமாக வந்தது. ஆனால், அந்தக் கப்பலும் தீப்பிடித்துவிபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தில் 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காணாமல்போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, யாழ்ப்பாண தீபகற்பத்தில் 7 விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், புலிகளுடன் கடும்சண்டை நடந்து வருவதாகவும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+