For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

நாடாளுமன்றத்திற்கு திட்டமிட்டபடி பொதுத் தேர்தல்: சந்திரிகா

கொழும்பு:

இலங்கை நாடாளுமன்றத்திற்கு திட்டமிட்டபடி பொதுத் தேர்தல் உரிய காலத்தில் நடக்கும் என்று அதிபர் சந்திரிகா குமார துங்கா கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. அக்டோபருக்குள் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் சண்டையையடுத்து நாடாளுமன்றத்திற்கு உரியகாலத்தில் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் உரிய காலத்தில் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் சந்திரிகா கூறியுள்ளார். டி.வி.க்கு அவர் அளித்த பேட்டியில், அனைத்துத்தடைகளையும் நல்லபடியாக தாண்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஜனநாயகத்திற்கும், அரசுக்கும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் விரைவில் தீரும். உரியகாலத்தில் நாடாளுமன்றத்திற்குப் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

பத்திரிகைகளுக்குத் தற்போது போர்ச் செய்திகள் வெளியிடுவதில் உள்ள சென்சார் முறை விரைவில் நீக்கப்படும். தேர்தலை ஜனநாயக முறையில்நடத்துவதற்கேற்ப பத்திரிகைகளுக்கு செய்தி வெளியிடுவதில் எந்த தடையும் இருக்காது.

விரைவில் புதிய அரசியல் சட்டம்:

இதற்கிடையே, இலங்கை நாடாளுமன்றத்தில் ஜூலை இறுதிக்குள் புதிய அரசியல் வரைவுச் சட்டம் தாக்கல் செய்யப்படும் என்று அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த விவாதமும் இந்த மாத இறுதிக்குள் முடியும் என்றும் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X