முகத்தில் தெளித்த சாரல்...
நாடாளுமன்றத்திற்கு திட்டமிட்டபடி பொதுத் தேர்தல்: சந்திரிகா
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்திற்கு திட்டமிட்டபடி பொதுத் தேர்தல் உரிய காலத்தில் நடக்கும் என்று அதிபர் சந்திரிகா குமார துங்கா கூறியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. அக்டோபருக்குள் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் சண்டையையடுத்து நாடாளுமன்றத்திற்கு உரியகாலத்தில் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் உரிய காலத்தில் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் சந்திரிகா கூறியுள்ளார். டி.வி.க்கு அவர் அளித்த பேட்டியில், அனைத்துத்தடைகளையும் நல்லபடியாக தாண்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஜனநாயகத்திற்கும், அரசுக்கும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் விரைவில் தீரும். உரியகாலத்தில் நாடாளுமன்றத்திற்குப் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.
பத்திரிகைகளுக்குத் தற்போது போர்ச் செய்திகள் வெளியிடுவதில் உள்ள சென்சார் முறை விரைவில் நீக்கப்படும். தேர்தலை ஜனநாயக முறையில்நடத்துவதற்கேற்ப பத்திரிகைகளுக்கு செய்தி வெளியிடுவதில் எந்த தடையும் இருக்காது.
விரைவில் புதிய அரசியல் சட்டம்:
இதற்கிடையே, இலங்கை நாடாளுமன்றத்தில் ஜூலை இறுதிக்குள் புதிய அரசியல் வரைவுச் சட்டம் தாக்கல் செய்யப்படும் என்று அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த விவாதமும் இந்த மாத இறுதிக்குள் முடியும் என்றும் தெரிகிறது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications