தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டதால்அதிருப்தியடைந்த தற்போதைய நிர்வாகிகள், அலுலகத்தை உரிமையாளர்களிடம்ஒப்படைத்து விட்டு, தொலைபேசி இணைப்புகளையும் துண்டித்து விட்டுச் சென்றுவிட்டனர்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தி நீக்கப்பட்டு, புதியதலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். இதனால்தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளனர்.
குறிப்பாக, தற்போதைய தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி வெளிப்படையாகவேதனது குமுறலை வெளியிட்டுள்ளார். இளங்கோவன் நியமனம், தமிழகத்தில் காங்கிரஸ்வளர்ச்சிக்கு உதவாது. இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகவும் ஏமாற்றமாகஉள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக, சென்னை மைலாப்பூர் கிருஷ்ணசாமி அவென்யூவில்வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த காங்கிரஸ் அலுவலகத்தை இளங்கோவன்தலைவராக நியமிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த
காங்கிரஸ் நிர்வாகிகள், கோபத்தில் அலுவலகத்தை அதன் உரிமையாளரிடம்ஒப்படைத்து விட்டனர். தொலைபேசி இணைப்புகளையும் அவர்கள் துண்டித்துவிட்டனர்.
அனைத்துத் தலைவர்களும் அதிருப்தியில்:
திண்டிவனம் ராமமூர்த்தி தவிர அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களுமே, இளங்கோவன்நியமனத்தால் அதிருப்தியடைந்துள்ளனர்.
முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, குமரி அனந்தன் ஆகியோர் இளங்கோவன்நியமனம் குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினர்.
த.மா.கா.வில் சேருவாரா திண்டிவனம்?
இளங்கோவன் நியமனம் குறித்து பெரும் அதிருப்தியில் உள்ள திண்டிவனம்ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. சமீபகாலமாக அவர் மூப்பனாருடன் நெருக்கமாக இருப்பதால், தமிழ் மாநில காங்கிரஸில்சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிட்டால் தனிக் கட்சியை அவர்துவக்கலாம் என்றும் தெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications