தமிழகத்தில் இன்று
இந்தியாவின் தேயிலை உற்பத்தி 29 சதவீதம் அதிகரிப்பு
கல்கத்தா:
இந்தியாவின் தேயிலை உற்பத்தி 29.39 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் முதல் 4 மாதங்களில் 14.20 கோடி கிலோ தேயிலை உற்பத்திசெய்யப்பட்டுள்ளது என்ற தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 7 கோடி கிலோ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உற்பத்திசெய்யப்பட்ட தேயிலையை விட 46.17 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு ஆண்டின் முதல் 4 மாதங்களில் 14.20 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் 10.90 கோடிகிலோ தேயிலைதான் உற்பத்தி செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் வட இந்திய மாநிலங்களில் கடும் வறட்சி நிலவியது. அதனால், உற்பத்தி குறைந்தது. ஆனால், இந்த ஆண்டு நல்ல மழைபெய்ததால் உற்பத்தி அதிகமாகியுள்ளது என்று வாரிய அதிகாரி எம். பரமாநந்தன் தெரிவித்தார்.
கடந்த 4 மாதங்களில் இந்தியா முழுவதும் உற்பத்தியான மொத்த தேயிலையில் ஏறக்குறைய 50 சதவீதம் வட இந்திய மாநிலங்களில் உற்பத்திசெய்யப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் 7.5 கோடி கிலோவும், தென் மாநிலங்களில் 6.7 கோடி கிலோவும் உற்பத்தியாகியுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications