ஹைதராபாத்தில் 108 ஏக்கரில் உருவாகிறது தேசிய விளையாட்டு போட்டி கிராமம்
ஹைதராபாத்:
2002-ம் ஆண்டின் தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
இதற்காக, விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்குவதற்காக கோல்கொண்டாகோட்டைக்கு அருகில் உ ள்ள கச்சேபோவ்லி என்ற இடத்தில் வீடுகள் கட்டப்பட உள்ளன.
சுமார் 108 ஏக்கரில் ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் இந்தக் கிராமம் உருவாக்கப்படும். இத் தகவலை திங்கள்கிழமை நடந்தஅமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மாநில உள்துறை அமைச்சர் டி. தேவேந்தர் கவுட் தெரிவித்தார்.
வீடுகள் கட்டுவதற்கான செலவில் ரூ.100 கோடியை கடனாக வழங்க ஹட்கோ ஒப்புக் கொண்டுள்ளது. மீதமுள்ள தொகைக்கு, நகரில் உள்ள பழையஅரசுக் கட்டடங்களை விற்று பணம் திரட்டப்படும்.
தேசிய விளையாட்டுப் போட்டிகள் முடிந்தவுடன், அந்த வீடுகள் விற்கப்பட்டும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலம் ஹட்கோ கடனை அடைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது என்றர் கவுட்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications