ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
ராணுவ வீரர்களை கெளரவிக்க 2 நிமிடம் ஸ்தம்பித்த" இலங்கை
கொழும்பு:
யமறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த நாட்டு மக்கள் 2 நிமிடம் மவுனமாக இருப்பார்கள். ஆனால், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப்போராடி வரும் இலங்கை ராணுவத்தினரைப் பெருமைப்படுத்தும் வகையில், இலங்கை மக்கள் சுமார் 2 நிமிடம் தங்களது வேலையை நிறுத்தி வைத்து அஞ்சலிசெலுத்தினர்.
இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, புதன்கிழமை சரியாக காலை 9.30 மணிக்கு நாடு முழுவதும் இலங்கை மக்கள் சுமார் இரண்டு நிமிடம் தங்கள்பணியை நிறுத்தி வைத்தனர். சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கூட வாகனங்களை அப்படியே நிறுத்தினர். தொழிற்சாலைகள் இயங்கவில்லை.அலுவலகங்கள் செயல்படவில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுடன் போரிட்டு வரும் இலங்கை ராணுவத்தினருக்கு மனதைரியத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கைக்கு இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்தது.












Click it and Unblock the Notifications