ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
தாய்லாந்-தில் புலிகளுக்காகக் கட்டப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் பறிமுதல்
பாங்காக்:
விடுதலைப் புலிகளுக்காக தாய்லாந்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சிறிய நீர்மூழ்கிக் கப்பலை தாய்லாந்து நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல்செய்துள்ளனர்.
தாய்லாந்தில் புகெட் தீவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் விடுதலைப் புலிகளின் கடற்படைக்கு இக் கப்பல் கட்டப்பட்டு வந்தது. பாதி கட்டப்பட்டுள்ளநிலையில் இக் கப்பலை தாய்லாந்து அதிகாரிகள் கடந்த ஏப்ரலில் கண்டுபிடித்தனர்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழரான கிறிஸ்டி ரெஜினால்ட் லாரன்ஸ் என்பவருக்குச் சொந்தமானது அந்த கப்பல் தளம். விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவிசெய்துவருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் அவரை கடந்த ஏப்ரல் மாதமே தாய்லாந்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். லாரன்ஸுக்கும்கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு இருப்பது அப்போது தெரியவந்தது.
அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் கப்பல் கட்டும் தளத்தில் புதிய நீர்மூழ்கிக் கப்பல் கட்டப்பட்டு வந்ததைத் தாய்லாந்து அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.கப்பலைக் கண்டுபிடித்தபோது, கப்பல் தளத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அங்கு கடத்தல் பொருட்கள் ஏதும் இல்லை. ஆனால்,புலிகளுக்கு ஆதரவான ஆவணங்கள், ராடார், சோனார் போன்ற நவீன ஆயுதங்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர்.
புகெட் தளத்தில் புலிகளுக்கு கப்பல் கட்டப்பட்டதே தவிர, அத் தளத்துக்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அங்கு புலிகளின் நடமாட்டம் ஏதும்இல்லை என்று தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சூரின் பிட்சுவான் தெரிவித்தார்.
எங்கள் நாட்டை தங்களது நடவடிக்கைக்கு ஒரு தளமாக பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். எங்கள் நாட்டைச்சுற்றிலும் பலத்த கண்காணிப்பும், காவலும் போடப்பட்டுள்ளது என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications