ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
சென்னை:
செக்கோஸ்லோவேகியா போல் -இ-லங்-கை-யைப் பிரிப்பது தமி--ழர்-கள் பிரச்சினைக்குத் தீர்வாகாது. அந்நாட்டின் இறையாண்மையைக் காக்கும்வகையில் தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் கொடுப்பதே சரியான தீர்வாகும் என்று தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார் தெரிவித்தார்.
இலங்கை பிரச்சனை பற்றி சென்னையில் புதன்கிழமை மூப்பனார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கேள்வி: செக்கோஸ்லோவேகியா நாட்டின் அடிப்படையில் இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளாரே?
பதில்: செக்கோஸ்லோவேகியாவை இலங்கை பிரச்சனையுடன் ஒப்பிட முடியாது.
கே: மனிதாபிமான அடிப்படையில் இலங்கையைப் பிரித்துத் தரலாம் என்று கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளாரே?
ப: மனிதாபிமான அடிப்படையில் ஒரு நாட்டைத் துண்டாடுவது எப்படித் தீர்வாகும்?
கே: சரி இலங்கைப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்கிறீர்கள்?
ப: நான் ஒரு இந்தியன். என் நாட்டின் இறையான்மையைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் நினைப்பேன். அதேபோல் இலங்கையில் உள்ளவர்களும்நினைப்பார்கள். எனவே அங்குள்ள தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து, அந்நாட்டின் இறையாண்மையை அவர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இதுதான் தீர்வாகும்.
கே: 1989 ல் ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்கிறீர்களா?
ப: அதைவிட கூடுதலான அதிகாரங்கள் கூட தரலாம்.
கே: இப்பிரச்சனையில் இந்தியா தலையிட்டு சமரசம் பேச வேண்டும் என்று வலியுறுத்துவீர்களா?
ப: இந்தியா தலையிடவும் கூடாது. சமரசம் பண்ணவும் கூடாது.
கே: மதிமுகவும், பாமக யும் டெல்லியில் மத்திய அரசுடன் ஒத்துப் போய் விட்டு தமிழகத்தில் புலி ஆதரவு குரல் கொடுக்கின்றனவே... என்னகாரணம்?
ப: இது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும். அதனால் டெல்லியில் எதிர்த்துப் பேச மாட்டார்கள்என்-று மூப்பனார் கூறி-னார். பேட்டியின் போது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications