For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்

By Staff
Google Oneindia Tamil News

சிந்து விழாவைத் தொடங்கி வைக்க வாஜ்பாய் லே பயணம்

லே:

சிந்து விழாவைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் வாஜ்பாய் புதன்கிழமை காலை லே வந்தடைந்தார். அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ளஷெய் பகுதியிலுள்ள சிந்து நதிக் கரையோரத்தில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள செல்கிறார்.

லே விமானநிலையத்தில் பிரதமர் வாஜ்பாயை, கவர்னர் ஜி.சி.சக்ஸேனா, முதல்வர் பரூக் அப்துல்லா, போலீஸ் டைரக்டர் ஜெனரல் குருபச்சான் ஜகத்மற்றும் உயர்போலீஸ் அதிகாரிகள், மூத்த ராணுவ அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் வாஜ்பாயுடன் இமாச்சாலப் பிரதேச முதல்வர் பிரேம் குமார் தாமுல், பாரதிய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் நரேந்தர் மோதி ஆகியோர்சென்றனர்.

முன்னதாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக உள்துறை அமைச்சர் அத்வானி, மத்திய அமைச்சர் சி.எல்.குப்தா ஆகியோர் சிறப்பு விமானத்தில்லே வுக்குச் சென்றனர்.

வாஜ்பாய் லடாக்கில் கட்டப்படவுள்ள மத்திய புத்தமத மையக் கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சிந்து நதி, லடாக்கிலிருந்து, கைலாச மானோசரோவர் வழியாக பாகிஸ்தான் செல்கிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X