கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
ஜப்பான், மியான்மரில் நிலநடுக்கம்
டோக்கியோ:
ஜப்பானில் உள்ள க்யூஷூவ் தீவில் வியாழக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் டோக்கியோவிலிருந்து சுமார் 690 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது இந்தத் தீ-வு. இதில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. பொருட்களின் சேதமதிப்பையும் உடனடியாகக் கணக்கிட முடியவில்லை.
4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அதிக அளவு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஜப்பானில் 5 நாட்களில் இத்துடன் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டது. ஜப்பானின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை 5.8 என்ற ரிக்டர் அளவில்நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர். இதில் வீடுகளில் இருந்த ஜன்னல்கள் நொறுங்கி விழுந்தன.
கடந்த சனிக்கிழமை இதே போல் டோக்கியோ நகரில் 5.8 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் டோக்கியோ நகரில் கட்டிடம் ஒன்றுபாதிக்கப்பட்டது.