தமிழகத்தில் இன்று
தமி-ழ-க எம்.எல்.ஏக்-க-ளுக்-கு "டபுள் -பெட்-ரூம்" -வீ-டு-கள்
சென்னை:
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கென 240 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகட்டப்பட்டுள்ளது. ரூ 45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பை வரும் 12 ம் தேதி தமிழகமுதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கென அரசினர் தோட்டத்தில் விடுதிகள் உள்ளன. பழைய,புதிய விடுதிகள் என்று அழைக்கப்படும் அங்கு ஏராளமான அறைகள் உள்ளன. இந்த அறைகள்போதாது . ஆந்திரா போல் சட்டமன்ற உறுப்பினர்கள் வசிப்பதற்கு வசதியாக வீடுகள்கட்டித்தரப்பட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதை ஏற்று அதே அரசினர் தோட்டத்தில் 10 மாடிகொண்ட புதிய குடியிருப்பு தி.மு.க. ஆட்சியில்கட்டப்பட்டுள்ளது. 4 பிரிவுகளாக கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் மொத்தம் 240 வீடுகள் உள்ளன.ஒவ்வொரு வீடும் இரண்டு படுக்கையறைகள் கொண்டவை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கெனஅலுவலக அறை உள்பட சகல வசதிகளும் இந்த வீட்டில் செய்து தரப்பட்டுள்ளன.
இக் குடியிருப்பை வருகிற 12ம் தேதி மாலை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.இம்மாத்திற்குள் இந்த வீடுகள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு விடும். ஏற்கனவேஉள்ள விடுதிகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மேலவைஉறுப்பினர்கள் சென்னை வரும்போது தங்குவதற்காக குறைந்த வாடகையில் விட அரசுதிட்டமிட்டுள்ளது.