தமிழகத்தில் இன்று
பொருளாதாரத் தடையை நீக்-கக் கோ-ரு-கி-ற-து ஈராக்
நியூயார்க்:
ஐ.நா. விதித்துள்ள, பொருளாதாரத் தடையால், புற்றுநோய், ரத்தசோகை, கழலை, கருச்சிதைவு, மஞ்சள் காமாலை போன்றவற்றால் பாதிக்கப்படும்பெண்கள், குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஈராக் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஈராக் தொழிலாளர் மற்றும் சமூக விவகாரத் துறை அமைச்சர் சதீ அப்பாஸ் ஐக்கிய நாடுகள் சபையில் வியாழக்கிழமை பேசுகையில் இவ்வாறுதெரிவித்தார்.
அவர் பேசுகையில், புற்றுநோய், குறைபாடுகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பது, ரத்த சோகை, தைராய்டு சுரப்பு குறைவால் கழலை, கருச்சிதைவு, மஞ்சள்காமாலை, பதற்றம், மன அழுத்தம் ஆகியவை பெண்கள், குழந்தைகளிடையே அதிகரித்து விட்டது.
ஈராக்கைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளின் பெயரால் ஐ.நாவுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் இதுதான். தயவு செய்து,பொருளாதாரத் தடையைவிலக்கிக் கொள்ளுங்கள். உங்களது மனிதாபிமான பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள். தடையை நீக்குவதன் மூலம் அப்பாவித்தனமாக இறக்கும்பல உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்றார் அவர்.
ஈராக்கில் பொருளாதாரத் தடையால் பாதிக்கப்படும் பொதுமக்களைக் காப்பதற்காக, எண்ணைய்க்குப் பதில் உணவு என்ற திட்டத்தை 1996-ம்ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அனுமதித்தது. இதன்படி ஐ.நா. கண்காணிப்பின் கீழ், பெட்ரோலியப் பொருட்களை விற்று அதற்குப் பதில் உணவு போன்றஅத்தியாவசியப் பொருட்களை ஈராக் வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் இந்தத் திட்டத்தை, ஐ.நா. சபை நீடிக்கும்.
ஏழாவது திட்டக் காலம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிகிறது. இதை நீடிப்பது தொடர்பான விவாதம் ஐ.நா. சபையில் நடந்து வருகிறது. தற்போதுநீட்டிக்கப்படவுள்ள திட்டத்தில் புதிதாக ஒரு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கான கருவிகளை வாங்கிக் கொள்ளஈராக்கிற்கு அனுமதி அளிக்க இந்த அம்சம் வகை செய்கிறது.
திட்ட நீட்டிப்புக்கான தீர்மானத்தை இங்கிலாந்தும், பிரான்ஸும் கொண்டு வந்துள்ளன.













Click it and Unblock the Notifications