தமிழகத்தில் இன்று
ஊட்-டி-யில் க-டும் மழை: போக்-கு-வ-ரத்--து பாதிப்-பு
கோவை:
-ஊட்-டி-யில் சீசன் -முடிந்து மழை காலம் துவங்கியுள்ளது. நீல-கி-ரி மாவட்-டம் மு-ழு-வ--தும் பெய்து வரும் தொடர் மழையால் பல இடங்களில் மரங்கள்வீழ்ந்துள்-ளன. -போக்குவரத்து பாதிக்-கப்-பட்-டுள்-ள-து.
மேலும் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை துவங்கியுள்ளதால், நீலகிரியில் தற்போது மழை காலம் துவங்கியுள்ளது.
மழைக் காலங்களின் போது ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதிய சிக்கல்கள் நீலகிரி மாவட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு இம்மாதம் -முதல்மழை பெய்யத் துவங்கியுள்ளது. இதனால் பல இடங்களில் மரங்கள் வீழ்ந்துள்ளன.
கூடலூர், மசினகுடி, தொட்டபெட்டா, குந்தா ஆகிய ஊர்களுக்குச் செல்லும் ரோடுகளில் மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. ஊட்டியிலிருந்து குன்னூர் செல்லும்ரோடுகளிலும் மரங்கள் வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து மாற்றுப் பாதையில் விடப்பட்டுள்ளது.
இன்னும் பல இடங்களில் மின்கம்பங்கள் வீழ்ந்ததால் மின்சாரம் பாதிப்படைந்துள்ளது. இதனால் கோவை செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் 30 செ.மீயும், மேல்பவானியில் 20 செ.மீயும், -நடுவட்டத்தில் 12.5 செ.மீயும், கூடலூ-ரில் 5 செ.மீயும் மழைபதிவாகியுள்ளது.