தமிழகத்தில் இன்று
ஊட்-டி-யில் தொ-டர்-கி-ற-து க-டும் மழை
கோவை:
ஊட்--டி உள்-பட நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மரங்கள் விழுந்ததில் 20 வீடுகள் இடிந்தன.
தென் மேற்குப் பருவமழை துவக்கத்திலேயே நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பல இடங்களில் மரங்கள்வீழ்ந்துள்ளன.
மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் தடை பட்டுள்ளது. இந்த மின் கம்பங்களைச் சீரமைக்கும் பணியில்மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பல இடங்களில் ரோடுகளின் மீதும், வீடுகள் மீதும் மரங்கள் வீழ்ந்துள்ளன. இதனால் போக்குவரத்து பல இடங்களில் பாதிப்படைந்துள்ளன. 20 வீடுகள்சேதமடைந்துள்ளன.
தொடர் மழையால் ஒரு சில இடங்களில் நிலச் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து தொடங்கியது:
தொடர் மழையால் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.
பாதிக்கப்பட்டிருந்த மாவட்டத்தின் பெரும்பாலான சாலைகள் சரி செய்யப்பட்டு விட்டதால், சாலைப் போக்குவரத்து பல பகுதிகளில் சீரடைந்தது.ஊட்டியிலிருந்து போர்த்தி செல்லும் சாலை சீரமைக்கப்பட்டது. அந்தச் சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் அகற்றப்பட்டு விட்டன
மழை காரணமாக ஊட்டி குதிரைப்பந்தயம் சனிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications