மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்
167 அல்--உம்மா தீவிரவாதிகள் நீதி-மன்-றத்-தில் ஆஜர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 167 அல் உம்மாதீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி அத்வானிவருகையையொட்டி குண்டுகள் வெடித்தது. இந்த சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டோர்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்குத் தொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை 167 பேர் தனி நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்பட்டனர்.
167 தீவிரவாதிகளையும் ஆஜர் செய்வது இதுவே முதல்முறை. எனவே, அனைத்துதீவிரவாதிகளும் நீதிமன்றத்திற்குள் சந்தித்து, தங்கள் மகிழ்ச்சியைக் கட்டித் தழுவிவெளிப்படுத்திக் கொண்டனர்.
முக்கியக் குற்றவாளிகளாக வழக்கில் கூறப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் பாட்ஷா,கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி, அல் உம்மா பொதுச்செயலாளர் அன்சாரி ஆகியோர் தங்களது குறைகளைக் கூறி நீதிபதியிடம்முறையிட்டனர். அனைவரையும் கோவை சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.
இந்த கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் பரிசீலனை செய்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதிபதி வாக்குறுதியளித்தார்.
இதுவரை குற்றப்பத்திரிக்கை வாங்காத 36 பேரும் குற்றப்பத்திரிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், சென்னையைத் தவிர, பாளையம்கோட்டை, மதுரை, திருச்சி மற்றும் சேலம்சிறைகளில் உள்ள குண்டு வெடிப்பு வழக்கில் கைதான அனைவரையும் கோவைமத்திய சிறைக்கு மாற்றத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மனிதாபிமான அடிப்படையில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரநடவடிக்கை மேற்கொள்ளவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை அடுத்த மாதம்10 தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள் ரியாஸ் என்பவர் அப்ரூவராக மாறியதால்நீதிமன்றம் அவருக்கு மன்னிப்பு வழங்கி, அரசு தரப்பு சாட்சியாக மாற்றியுள்ளார்.
தீவிரவாதிகள் ஆஜர் செய்யப்பட்டதையொட்டி கோவையி பல இடங்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தனி நீதிமன்றத்தில் முழுமையானசோதனையிலும், தீவிரக் கண்காணிப்பிலும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
பாட்சா மற்றும் அப்துல் நாசர் மாதனி ஆகியோரைக் காண அவரது உறவினர்கள்நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.