தமிழகத்தில் இன்று
படுகொலை-கள் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் முழு அமைதி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
6 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வி.புதுப்பட்டி கிராமத்தில் தற்போது முழுஅமைதி நிலவுகிறது. எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை.
வி.புதுப்பட்டி கிராமத்தின் பக்கத்துக் கிராமமான ஜோதிநாயக்கனூர் பகுதியில் சிலர் கோழிப்பண்ணை ஒன்றை தீவைத்துக் கொளுத்தியதாகவும், இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விடுதலைசிறுத்தை புதிய தமிழகம்கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்தில் தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு பேர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட இடத்தில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் காவல்காத்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
யு.என்.ஐ.