தமிழகத்தில் இன்று
படுகொலை-கள் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் முழு அமைதி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
6 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வி.புதுப்பட்டி கிராமத்தில் தற்போது முழுஅமைதி நிலவுகிறது. எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை.
வி.புதுப்பட்டி கிராமத்தின் பக்கத்துக் கிராமமான ஜோதிநாயக்கனூர் பகுதியில் சிலர் கோழிப்பண்ணை ஒன்றை தீவைத்துக் கொளுத்தியதாகவும், இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விடுதலைசிறுத்தை புதிய தமிழகம்கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்தில் தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு பேர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட இடத்தில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் காவல்காத்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications