தமிழகத்தில் இன்று
பெரம்பலூர் அருகே பஸ்-டிராக்டர் மோதல்: 8 பேர் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பெரம்பலூர்:
அரசுப்போக்குவரத்துப் பஸ்சும், எதிரே இரும்புக்கம்பிகளை ஏற்றி வந்த டிராக்டரும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் பஸ்சில் பயணம் செய்த 8 பேர்சம்பவ இடத்திலேயே இறந்தனர். இச்சம்பவத்தில் மேலும் 28 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து பெரம்பலூர் அருகே திருமந்துறை கைகாட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நள்ளிரவு நடந்தது.
இவ்விபத்துக்குறித்துப் போலீசார் கூறுகையில், இரும்புக்கம்பியை ஏற்றி வந்த லாரியும் பஸ்சும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து ஏற்பட்டது. பஸ்சின்முன்பகுதியில் அமர்ந்திருந்த மக்களை அந்த இரும்புக்கம்பிகள் குத்திக்கிழித்ததில் அவர்கள் இறந்தார்கள்.
பஸ்சின் டிரைவரும், கண்டக்டரும் இந்த விபத்தில் இறந்தார்கள். இந்த பஸ் திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்துஏற்பட்டது.
இவ்விபத்தில் காயமடைந்த 11 பேர் அரசு தலைமை மருத்துவமனையிலும், மேலும் 11 பேர் திருச்சி கே.ஏ.பி.விஸ்வநாதன் மருத்துவமனையிலும்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 6 பேர் லேசான காயமடைந்த நிலையில் உயிர்தப்பினர் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications