தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ப்ளஸ் டூ மாணவருக்கு ஜெ. ரூ. 40,000 உதவி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ப்ளஸ்டூ தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் மூன்றாவது இடம் பெற்ற நாமக்கல் மாணவர் சண்முக சுந்தரத்தின் மேற்படிப்புக்காக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா ரூ. 40,000 வழங்கியுள்ளார்.
சண்முக சுந்தரத்தின் தந்தை கூலித் தொழிலாளி. தனது மகன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூயிரியில் சேர விரும்புவதாகவும், அதற்கான வசதி தங்களிடம் இல்லை.எனவே நிதியுதவி செய்ய வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் சண்முக சுந்தரத்தின் தந்தை கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து மாணவன் சண்முக சுந்தரத்திற்கு, எம்.ஜி.ஆர். அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ. 40,000 ஒதுக்கி ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாக அதிமுகசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications