தமிழகத்தில் இன்று
வருகிறது புதிய வகை சியாரா, சஃபாரி, சுமோ கார்கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
டாடா இன்ஜினியரிங் நிறுவனம் (டெல்கோ) தனது சியாரா, சஃபாரி, சுமோ கார்களில் புதிய வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, டெல்கோ நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜீவ் துபே கூறியதாவது:
டெல்கோ நிறுவனம் டீசல் சக்தியில் இயங்கும் சியாரா, சஃபாரி கார்களைத் தயாரித்து வருகிறது. இக் கார்களுக்குப் பதிலாக பெட்ரோலில் இயங்கும் புதியவகை சியாரா, சஃபாரி கார்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்குள் இப் புதிய கார்கள், மார்க்கெட் அறிமுகப்படுத்தப்படும். தேதி இன்னும் முடிவாகவில்லை. கார்களின் விலையும் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. தற்போது இரு கார்களின் புதிய இன்ஜின்களும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள டாடா சுமோ வகையிலும் புதிய கார் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் தூபே.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications